states

img

மருத்துவ மாணவி வன்கொலை நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்

கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தா வில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்து வக் கல்லூரி மருத்துவமனையில் முது நிலை மருத்துவ மாணவி பாலியல் வன் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆர்.ஜி.கர் மருத்துவமனை முன்னாள் டீன் சந்தீப் கோஷ் உட்பட பல ருக்கு தொடர்பு இருப்பதாக கூறி, அவர்க ளை கைது செய்தாலும், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக் கையில் மருத்துவ பணியாளர் சஞ்சய் ராய் பெயர் மட்டுமே உள்ளது. 

செவ்வாயன்று கொல்கத்தா சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில்,”கருத்தரங்க அறையில் ஓய்வெடுத்தபோது மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வன் கொலையில் சஞ்சய் ராய்க்கு மட்டுமே தொடர்பு உள்ளது” என அதில் கூறப் பட்டுள்ளது. சஞ்சய் ராய் மாணவி வன் கொலை வழக்கில் முதல் ஆளாக கொல் கத்தா காவல்துறையால் கைது செய்யப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.